மாவட்ட வாலிபால் போட்டியில்சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் மாவட்ட பள்ளி அணிகளுக்கான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. தொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட வாலிபால் சங்க தலைவர் ஆர். அர்ஜுன் துரை விருதுநகர் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் ஆர்.கே.துரைசிங், சென்னை மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன், பயிற்சியாளர்கள் ஜெகதீசன், கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் கோல்பெருமாள் அணி 25-14, 25-12 என்ற நேர்செட்டில் செட்டிநாடு அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் வேலம்மாள்செயின்ட் பீட்ஸ், சேதுபாஸ்கர், பென்டிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ராட்லர்) அணி 25-21, 25-17 என்ற நேர்செட்டில் வேலம்மாள் அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் லேடி சிவசாமி, பிரசிடென்சி, சிவகாசி நாடார், குண்டூர் சுப்பையா பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.